புழல் சிறையில் கைதிகளை சந்திக்கும் வழக்கறிஞர்களுக்கு பிரச்சினைகள் உள்ளதா? - ஆய்வுக் குழு அமைத்து ஐகோர்ட் உத்தரவு

2 months ago 12

சென்னை: புழல் சிறையில் கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கு மேற்கொள்ள வசதிகள் குறித்தும், ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வழக்கறிஞர்கள் குழுவை அமைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புழல் மத்திய சிறையில் உள்ள கைதிகளை வழக்கறிஞர்கள் வழக்கு நிமித்தமாக சந்திக்க ஆன்லைனில் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். கைதிகளுடன் இண்டர்காமில் மட்டுமே வழக்கறிஞர்கள் பேச வேண்டும் என புதிய கட்டுப்பாடுகளை சிறைத்துறை நிர்வாகம் பிறப்பித்துள்ளது. இதன்மூலம் கைதிகளுக்கான சட்ட உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கட்டுப்பாடுகளை நீக்கி, வழக்கறிஞர்கள் கைதிகளுடன் சுதந்திரமாக நேரில் பேச அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் ஆனந்தகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Read Entire Article