கடையநல்லூர், பிப்.18: கடையநல்லூர் பேட்டை மேற்கு மலம்பாட்டை தெருவை சேர்ந்தவர் நாகூர்மைதீன் (52). இவர் தனது வீட்டின் அருகிலேயே புரோட்டா கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டிவிட்டு நாகூர் மைதீன் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்து பார்த்த போது கடையின் மேற்கூரை ஓடுகள் திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியில் பணம் இல்லாததால் மர்ம நபர்கள் 420 ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ மைதாமாவை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து நாகூர்மைதீன் கடையநல்லூர் போலீசில் செய்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், மேலக்கடையநல்லூரை சேர்ந்த ஆறுமுகம் மகன் லட்சுமணன் (33) பிச்சையா மகன் திருமலைமுத்து (50) என தெரியவந்தது. இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
The post புரோட்டா கடையில் ஓட்டை பிரித்து மைதா மாவு திருடிய 2பேர் கைது appeared first on Dinakaran.