சென்னை: புயல் பாதிப்புகளுக்கு நியாயமான, உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசு தான சட்ட ரீதியாக முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் 63 பேர் இறந்தனர். 732 கால்நடைகள் பலியாகின. 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெற்பயிர்கள், வாழை, தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. 56 ஆயிரத்து 942 குடிசை வீடுகளும், 30 ஆயிரத்து 322 ஓட்டு வீடுகளும் சேதமடைந்தன.