புதுவையில் உயர்நீதிமன்றம் அமைக்கக்கோரி ஒன்றிய சட்ட அமைச்சரிடம் வழக்கறிஞர் சங்கத்தினர் மனு

4 months ago 16

 

புதுச்சேரி, ஜன. 7: புதுவையில் உயர்நீதிமன்றம் அமைக்கக்கோரி ஒன்றிய சட்ட அமைச்சரிடம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர். புதுவை தனியார் ஓட்டலில் பாண்டிச்சேரி டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த பயிற்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வருகை புரிந்த ஒன்றிய சட்ட அமைச்சர்‌ அர்ஜூன் ராம் மெக்வால்-ஐ புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர் நாராயண குமார் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர். அதில், புதுச்சேரிக்கு தனியாக உயர் நீதிமன்றம் ஏற்படுத்த வேண்டும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென குறிப்பிட்டு இருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

The post புதுவையில் உயர்நீதிமன்றம் அமைக்கக்கோரி ஒன்றிய சட்ட அமைச்சரிடம் வழக்கறிஞர் சங்கத்தினர் மனு appeared first on Dinakaran.

Read Entire Article