புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்காக ஓபிசி கணக்கெடுப்பு பணி 95% நிறைவு

6 months ago 36

புதுச்சேரி: உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ஓபிசியினருக்கு உரிய இடஒதுக்கீட்டை பரிந்துரைக்கும் புதுச்சேரி முன் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஓபிசி மக்கள் தொகையை வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இரண்டு முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. 1968ம் ஆண்டுக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அப்போது, தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் 2011ம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தனர். அதன் பிறகு இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. 2021 அக்டோபர் மாதத்துக்குள் தேர்தலை நடத்தி, முடிவுகளை அறிவிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Read Entire Article