புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மழை விடுமுறை

4 months ago 22

புதுச்சேரி: கனமழை எச்சரிக்கையால் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இடையில் ஒரு சில நாட்கள் இரவில் மழை பெய்தாலும், பகலில் வெயில் வாட்டி வதைத்தது. அண்மையில் பகலில் கடுமையான மழை பெய்தது. இந்த மழையால் நகர பகுதி சாலைகள் முழுவதும் வெள்ளக்காடானது. வாகனங்களில் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனிடையே, நாளை முதல் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் அடுத்தடுத்து உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவையில் 3 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில், புதுவைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் புதுவையில் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது.

Read Entire Article