புதிய சர்ச்சையில் சிக்கிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின்

5 hours ago 2

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் (வயது 38). இவர் இந்திய அணிக்காக 106 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், 220 ஐ.பி.எல். போட்டிகளிலும் ஆடி உள்ளார். இவர் கடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதேசமயம், ஐ.பி.எல்., உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், அஸ்வின் தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார். குமரி மாவட்டம் அருவிக்கரையில் தடைசெய்யப்பட்ட பாறைக்கூட்டத்தில் நண்பர்களுடன் அஸ்வின் குளித்துள்ளார். தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் பெய்த மழையால் பரளியாற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் பாறைக்கூட்டம் பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த தடையை மீறி அஸ்வின் தனது நண்பர்களுடன் அங்கு குளித்துள்ளார். இது தொடர்பான புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததால் அஸ்வின் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 





 


Read Entire Article