“புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு மத்திய அரசு வஞ்சனை” - அமைச்சர் தங்கம் தென்னரசு

6 hours ago 2

சென்னை: “இந்தாண்டு மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழகம் ஏற்றுக்கொள்ளாததால், ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும் 2,152 கோடி ரூபாயை மத்திய அரசு தமிழகத்துக்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது” என்று 2025-26 பட்ஜெட் உரையின்போது தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். பள்ளிக்கல்வித்துறை தொடர்பான அறிவிப்புகளின் போது அவர் பேசுகையில், “பள்ளிக்கல்வித் திட்டத்தில் சமக்ர சிக் ஷா சார்பில் பல்வேறு மாணவர்கள் நலன் சார்ந்த திட்டங்களை, கடந்த 7 ஆண்டுகளாக மாநில அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.

Read Entire Article