புகையில்லா போகி கொண்டாடுவோம்

5 months ago 20

 

கோவை, ஜன. 11: பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லாத பொருட்களை எரித்து போகி பண்டிகையை கொண்டாடினர். ஆனால், தற்போது போகி பண்டிகை நாளில் பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர்கள், டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரித்து வருகின்றனர். இதனால், ஏற்படும் நச்சு வாயு காரணமாக காற்று மாசு ஏற்படுகிறது.

இது பொதுமக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. மேலும், விமானங்களின் வருகை புறப்படுதல் பாதிப்பு அடைகிறது. எனவே, வரும் போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாத்து புகையில்லா போகியாக கொண்டாடுவோம் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தியுள்ளார்.

The post புகையில்லா போகி கொண்டாடுவோம் appeared first on Dinakaran.

Read Entire Article