போடி, ஜன. 14: போடியில் புகையிலை பொருட்கள் விற்ற மூவரை போலீசார் கேது செய்தனர். போடி நகர் எஸ்ஐக்கள் குருகவுதம், முத்துப்பாண்டி, கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கொக்கையர் பள்ளி அருகே சரவணன் (43) என்பவரது பெட்டிக்கடை, குலாலர்பாளையம் கரட்டுப்பட்டி பாதையிலுள்ள செல்வராஜ் (60) என்பவரது பெட்டிக்கடை, மணி (42) என்பவரது பெட்டிக்கடையில் இருந்து, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து இவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post புகையிலை விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.