புகையிலை விற்ற 2 பெண்கள் கைது

7 months ago 39

 

ஈரோடு,அக்.7: ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் கடைகளில் திடீர் சோதனை நடத்தி,நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி, ஈரோடு மாயபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் சித்தோடு போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து கடை உரிமையாளரான ஈரோடு ஆர்என் புதூர் மாயபுரத்தை சேர்ந்த திலகா (47) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 825 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், ஈரோடு அமராவதி நகரில் உள்ள கடையில் சித்தோடு போலீசார் சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா விற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடையின் உரிமையாளரான அதேபகுதியை சேர்ந்த சுதா (44) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 528 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post புகையிலை விற்ற 2 பெண்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article