புகையிலை பொருள் விற்ற மூதாட்டி உட்பட 3 பேர் கைது

4 months ago 10

 

திருப்பூர், பிப்.19: நல்லூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, புதுப்பாளையம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த ஈஸ்வரி (60), என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் டாஸ்மாக் பார் அருகில் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த பிரியாகண்ணன் (26), மணிகண்டன் (18), ஆகியோரை கைது செய்து 300 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

The post புகையிலை பொருள் விற்ற மூதாட்டி உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article