புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 2 பேர் கைது

3 weeks ago 5

 

சிதம்பரம், ஜன. 10: கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்பேரிலும், சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் அறிவுரையின்பேரிலும், அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கஜேந்திரன், ரமணி, மணிகண்டன், ரமேஷ், பாலசுப்பிரமணி உள்ளட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் சந்தேகத்திற்கிடமான வகையில் இரு சக்கர வாகனத்துடன் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த மணி மகன் விஜய்(24), காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையை சேர்ந்த முகமது ஹனிபா மகன் ஹாஜா மொய்தீன்(25) ஆகியோர் என தெரியவந்தது.

இருசக்கர வாகனத்தில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு சுமார் ₹1.30 லட்சமாகும். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட விஜய் என்பவர், கடந்த மாதம் மினி லாரியில் ரகசிய அறை வைத்து அதில் ஒன்றரை டன் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article