கரூர், பிப். 6: கரூர் அருகே புகார் அளித்த பெண்ணிடம் போட்டோவை அனுப்பச் சொல்லி வாட்ஸ் காலில் கெஞ்சிய இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் வெங்கமேடு மற்றும் வாங்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர் செந்தூர் பாண்டியன் (48). கடந்த சில நாட்களுக்கு முன்பு வாங்கல் காவல் நிலையத்துக்கு சொந்த பிரச்னை காரணமாக புகார் அளிக்க வந்த பெண்ணிடம் வாட்ஸ்அப் காலில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணிடம் உனது போட்டோவை அனுப்பிவை எனவும் கெஞ்சியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. விசாரணையில் திருச்சி சரக அதிகாரிகள், இன்ஸ்பெக்டரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.
The post புகார் தந்த பெண்ணிடம் கெஞ்சிய இன்ஸ்பெக்டர் appeared first on Dinakaran.