புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன்(66) மதுரையில் உள்ள வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழப்பு!

7 months ago 18

மதுரை: புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன்(66) மதுரையில் உள்ள வீட்டின் குளியலறையில் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து உயிரிழந்தார். ஏராளமான சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார் இந்திரா சௌந்தரராஜன்.

ஆன்மிக சொற்பொழிவு, திரைப்படங்கள், நாவல்கள் போன்ற பல துறைகள் மூலம் புகழ்பெற்றவர். இந்திரா சௌந்தரராஜன் சேலத்தை பூர்வீகமாக கொண்டாலும், கடந்த 40 ஆண்டுகளாக மதுரையில் வசித்து வந்தார். அவள் ஒரு சாவித்ரி, ஸ்ரீபுரம், எங்கே என் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான சிறுகதைகள் எழுதியுள்ளார். சிருங்காரம், அனந்தபுரத்து வீடு ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

சிருங்காரம் படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். ‘ருத்ரம்’ தொலைக்காட்சித் தொடருக்காக தமிழக அரசின் விருது பெற்றார். மேலும் சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருது, மைலாப்பூர் அகாடமி விருது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் இவரின் மறைவு அவரின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

The post புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன்(66) மதுரையில் உள்ள வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article