பீச்சில் இறந்து கரை ஒதுங்கிய 1000 ஆலிவ் ரெட்லி ஆமைகள்

2 months ago 12

கொள்ளிடம்: சீர்காழி வனச்சரக சார்பில் பொறிப்பகங்களில் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஆமைக்குஞ்சுகள் கடந்த வருடம் கடலில் விடப்பட்டுள்ளன. தற்போது முட்டையிடும் பருவம் என்பதால் பல ஆயிரக்கணக்கான ஆலிவ் ரெட்லி ஆமைகள் மயிலாடுதுறை கடற்கரை பகுதிக்கு வந்து முட்டையிட்டு செல்கின்றன. கரைக்கு வந்து திரும்பும் அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள், கழிவுநீரால் பாதிக்கப்பட்டும், மீன்பிடி வலைகள் மற்றும் கப்பல், படகுகளின் இன்ஜின் காற்றாடிகளில் சிக்கி அடிபட்டும், சுருக்குமடி வலைகளில் சிக்கியும் இறக்கின்றன.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் மடவாமேடு, திருமுல்லைவாசல், பழையாறு, தொடுவாய், கூழையாறு, கொட்டாய்மேடு, சின்ன கொட்டாய்மேடு, நடுக்கொட்டாய்மேடு உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில்ஆயிரக்கணக்கான அரிய வகை ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியது.

The post பீச்சில் இறந்து கரை ஒதுங்கிய 1000 ஆலிவ் ரெட்லி ஆமைகள் appeared first on Dinakaran.

Read Entire Article