
சென்னை,
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் நேற்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூலகத்தில் வெளியிட்டார்.
இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள், வருகைப்புரியாத தேர்வர்கள், தனித்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு ஜூன் 25-ந்தேதி முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோல்வியடைந்த மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவே துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 25-ந்தேதி மொழிப்பாட தேர்வுகள் நடைபெறுகின்றன. 26-ந்தேதி ஆங்கில பாட தேர்வுகளும், 28-ந்தேதி முதல் இதர பாடங்களுக்கான தேர்வுகளும் நடைபெறுகின்றன. ஜூலை 2-ந்தேதி தேர்வுகள் நிறைவு பெறுகின்றன. அனைத்து தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி, மதியம் 1.15 மணிக்கு முடிவடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
