பிளக்ஸ் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

3 months ago 12

பணகுடி,டிச.2: பிளக்ஸ் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டியது தொடர்பாக பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணகுடி அருகேயுள்ள நதிப்பாறை மேல்பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (32). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவருக்கு பிளக்ஸ் வைப்பது தொடர்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று அதே பகுதியில் டீக்கடை முன்பு ராஜாமணி தனது நண்பர்களான  ரெகுநாதபுரம் நாராயண சுவாமி கோவில் தெருவை சேர்ந்த காந்தி (22), ராஜு (22) ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அரவிந்த் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜாமணியை வெட்ட முயன்றார். இதனை காந்தி, ராஜு தடுக்க முயன்ற போது அவர்களது கையில் வெட்டு விழுந்தது. பின்னர் அங்கிருந்து அரவிந்த் தப்பியோடினார். இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரையும் மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பிளக்ஸ் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Read Entire Article