பிரேக் பிடிக்காமல் சென்ற அரசு பஸ்

3 months ago 10

சிங்கம்புணரி, பிப்.6: மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து சிங்கம்புணரிக்கு நேற்று மதியம் அரசு டவுன் பஸ் வந்தது. பின்னர் 12.30 மணிக்கு சிங்கம்புணரியில் இருந்து மேலூருக்கு பத்துக்கு மேற்பட்ட பயணிகளுடன் சென்றது. அப்போது நான்கு ரோடு சந்திப்பில் பஸ்சின் பிரேக் பிடிக்காததால், பஸ் கட்டுப்பாட்டை இழந்து திருப்பத்தூர் சாலை நோக்கி செல்ல ஆரம்பித்தது. சேவகபெருமாள் கோவில் அருகே பயணிகள் கூச்சலிட்டதை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கட்டைகளை டயரின் அடியில் போட்டு பஸ்ஸை நிறுத்தி உள்ளனர். உடனடியாக பேருந்தின் பிரேக் தற்காலிகமாக சரி செய்யப்பட்டு பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பழநி பாதயாத்திரை பக்தர்கள் செல்லும் வழியில் பஸ் பிரேக் பிடிக்காமல் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பிரேக் பிடிக்காமல் சென்ற அரசு பஸ் appeared first on Dinakaran.

Read Entire Article