
பாரீஸ்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-ஆடம் பாவ்லாசிக் (செக்குடியரசு) ஜோடி ஹென்றி பாட்டன் (இங்கிலாந்து)- ஹாரி ஹெலியோவாரா (பின்லாந்து) இணையுடன் மோதியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போபண்ணா ஜோடி 2-6 மற்றும் 6-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் போபண்ணா ஜோடி நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.