
பாரீஸ்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), கமிலா ரகிமோவா (ரஷியா) உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-1 மற்றும் 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இவர் 2-வது சுற்றில் ஜில் டீச்மேன் உடன் மோத உள்ளார்.