மதுரை: மதுரை நகர் மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம் நேற்று தெப்பக்குளம் அருகே நடந்தது. இதில் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, ‘‘எல்லோருக்கும் சாப்பாடு ரெடி பண்ணியிருக்கு. மீட்டிங் முடிஞ்சதும் போகும்போது எல்லோரும் சாப்பிட்டுட்டு போகணும். சாப்பிடாமல் போனால் போற வழியில், ரத்தம் கக்கி செத்துப் போவீங்க…’’ என்றார்.
நகைச்சுவைக்காக பேசுவதுபோல செல்லூர் ராஜூ பேசினாலும், கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அனைவருமே பெரும் அபசகுனமாகக் கருதி முகம் சுளித்தனர். எப்போதும் தானே முன்வந்து பேட்டி தரும் செல்லூர் ராஜூ, சமீபத்தில் பல கோடி ரூபாய் தொகை தனது பண்ணை வீட்டில் மாயமானது தொடர்பாக கேள்விகள் கேட்கக்கூடும் என்பதால், செய்தியாளர்களின் பேட்டியை தவிர்த்ததுடன், கூட்டத்திலும் பங்கேற்க வேண்டாமெனக் கூறி அவர்களை திருப்பி அனுப்பினார்.
The post ‘பிரியாணி சாப்பிட்டு போங்க… இல்லாட்டி ரத்தம் கக்கி சாவீங்க…’ செல்லூர் ராஜூ சாபம் appeared first on Dinakaran.