பிரியங்கா காந்தியை ஆதரித்து வயநாடு தொகுதியில் நவ.2 முதல் தமிழக காங்கிரஸ் பரப்புரை

3 months ago 16

சென்னை: வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் வரும் 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை வாக்குசேகரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரியங்கா காந்தியை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டியது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் தலையாய கடமையாகும். இதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிரியங்கா காந்தி வெற்றிக்காக தேர்தல் பணியாற்றிட எனது தலைமையில், முன்னாள் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளோம்.

Read Entire Article