வாஷிங்டன்: பிரதமர் மோடி என் சிறந்த நண்பர் என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், மோடி ஒரு புத்திசாலி என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்கும் என்றும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். இதில் வரிவிதிப்பும் ஒன்று. ஆனால், அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 2ம் தேதி பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த முடிவால் சர்வதேச அளவில் வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பேசியதாவது, உங்களிடம் ஒரு சிறந்த பிரதமர் குறித்து சொல்ல விரும்புகிறேன். அவர் மிகவும் புத்திசாலி மற்றும் என் நண்பர். பிரதமர் மோடி சமீபத்தில் இங்கு வந்தார். நாங்கள் எப்போதும் மிகவும் நல்ல நண்பர்கள். உலகிலேயே அதிகமான வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அது மோசமானது. அதே நேரத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக செயல்படும்’ என்று தெரிவித்தார். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை டிரம்ப் பதவியேற்ற சில நாள்களிலேயே, அவரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post பிரதமர் மோடி என் சிறந்த நண்பர்.. மீண்டும் மோடியை புகழ்ந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்..!! appeared first on Dinakaran.