பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு!

6 months ago 21

கர்நாடக: பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைதாகி பிரஜ்வல் ரேவண்ணா சிறையில் உள்ளார். ஜே.டி.எஸ். கட்சி முன்னாள் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார். பிரஜ்வல் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு ஆக.24-ல் 2144 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. பிரஜ்வல் தன்னை பலாத்காரம் செய்ததாக அவரது வீட்டு பணிப்பெண் கொடுத்த புகாரில் அவர் மீது வழக்கு பதியப்பட்டது.

 

The post பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article