பிரசவித்த பெண் காவலர்களுக்கு விரும்பும் இடத்தில் பணியிட மாறுதல்: டிஜிபி சங்கர் ஜிவால் உறுதி

7 months ago 47

திருநெல்வேலி: தமிழக முதல்வர் உத்தரவுப்படி சமீபத்தில் குழந்தை பெற்ற பெண் காவலர்களுக்கு விரும்பும் இடத்தில் பணியிட மாறுதல் அளிக்கப்படும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

தென்மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று டிஜிபி சங்கர் ஜிவால் ஆய்வு மேற்கொண்டார். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று 2-வது நாளாக திருநெல்வேலி மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படையில் அவர் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து காவலர்களின் குறை தீர்க்கும் நிகழ்ச்சி அங்கு நடைபெற்றது. காவலர்களின் விருப்ப பணியிட மாற்றம் கோரிய மனுக்களை காவல்துறை உயர் அதிகாரிகள் சேகரித்து டி.ஜி.பி.யிடம் வழங்கினர்.

Read Entire Article