சென்னை: பெண்களுக்கான `பிங்க்' ஆட்டோ எனப்படும் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நலத்துறை எச்சரித்துள்ளது.
சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக, பெண்களுக்கான உதவி எண், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட `பிங்க்' ஆட்டோக்கள் எனப்படும் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் நடைமுறைப்படுத்தப்படும் என சமூக நலத்துறை சார்பில் கடந்த ஆண்டு மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.