பாலிஷ் போடுவதாக தங்க நகை பறிக்க முயன்ற வடமாநில இளைஞர்கள்

4 months ago 13

 

சங்கராபுரம், பிப். 23: சங்கராபுரம் அருகே பாலிஷ்போடுவதாக கூறி தங்க நகை பறிக்க முயன்ற வடமாநில இளைஞர்களுக்கு தர்ம அடி விழுந்தது. பின்னர் அவர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஆரூர் கிராமம் மேற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி லட்சுமி. இந்நிலையில் நேற்று இவரிடம், வடமாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் தங்க தாலிக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி 2 பவுன் தங்க தாலியை வாங்கியுள்ளனர்.

பின்னர் அந்த நகையை உருக்கி ஏமாற்ற முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த லட்சுமி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று வடமாநில இளைஞர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர் பின்னர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சங்கராபுரம் போலீசார், வடமாநில இளைஞர்களை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் பீகார் மாநிலம், மத்திய புறா மாவட்டம், பங்கன் ஊர் கிராமத்தை சேர்ந்த சந்தனகுமார் (24), சோனாகுமார் (28) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார், அவர்களிடம் வேறு எங்கேயாவது இதுபோன்று சம்பவங்களில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் பெண்ணிடம் தங்க தாலிக்கு பாலிஷ் போடுவதாக கூறி நகையை திருட முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பாலிஷ் போடுவதாக தங்க நகை பறிக்க முயன்ற வடமாநில இளைஞர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article