
புவனேஸ்வரம்,
ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்ட பகுதியை சேர்ந்தவர் 60 வயது முதியவர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய மனைவி இறந்துவிட்டதால், வீட்டில் தனியாக வசித்து வந்தார்.கடந்த 4-ந் தேதியில் இருந்து அவர் மாயமானதாக, போலீசில் அவருடைய உறவினர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். அப்போது அந்த கிராமத்தில் இருந்து, 2 கி.மீ. தொலைவில் உள்ள வனப்பகுதியில் எலும்புக்கூடு கிடப்பதாக வந்த தகலைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆணின் எலும்புக்கூட்டை, கைப்பற்றிய போலீசார் அதனை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், எலும்புக்கூடாக கிடந்தது, காணாமல் போனதாக கூறப்பட்ட முதியவர் என்று தெரியவந்தது.
இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த முதியவர் கொலை செய்யப்பட்டதும், அதற்கான பின்னணி பற்றியும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.போலீசாரின் விசாரணையில், அந்த முதியவர் தனது மனைவி இறந்த பின்னர் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து யாரும் புகார் கொடுக்காததால், அவர் தொடர்ந்து பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
கடந்த 3-ந்தேதி அன்று அந்த கிராமத்தை சேர்ந்த 52 வயது விதவை பெண் ஒருவரை, அந்த முதியவர் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.பாதிக்கப்பட்ட அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது உறவினர்களிடம் கூறினார். இதைக்கேட்ட பெண்கள் சிலர் தாங்களும் அவரால் சீரழிக்கப்பட்டோம். இனியும் ெபாறுத்துக்கொள்ள முடியாது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து அந்த விதவைப் பெண் உள்பட 8 பெண்களும், அவர்களுக்கு உதவியாக 2 ஆண்களும் ஒன்று சேர்ந்து, 3-ந்தேதி இரவே அந்த முதியவர் வீட்டுக்கு சென்றனர்.அப்போது அவர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 8 பெண்களும் தங்களிடம் இருந்த கத்தியால் அவரை வெட்டி படுகொலை செய்தனர்.
பின்னர் முதியவர் உடலை 10 பேரும் சேர்ந்து, அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று தீ வைத்து எரித்தனர். இந்த தகவல்கள் அனைத்தும் ேபாலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து சம்பந்தப்பட்ட 10 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி கஜபதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜதீந்திர குமார் பாண்டா கூறுகையில், இந்த கொலையில் ஈடுபட்ட 8 பெண்களில் 6 பேர் அந்த முதியவரால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் எந்த புகாரும் அளிக்கவில்லை. புகார் கொடுத்து இருந்தால் போலீசார் நடவடிக்கை எடுத்து இருப்பார்கள். அதே நேரம் சட்டத்தை அவர்கள் கையில் எடுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.