
கோவை,
சேலம் கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது:- கேரள மாநிலம் பாலக்காடு-போத்தனூர் பிரிவில் பாலக்காடு சந்திப்பு-கோட்டேகாடு ரெயில் நிலையங்களுக்கு இடையில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் சில ரெயில்கள் ரத்தும், பகுதி அளவு ரத்தும் செய்யப்படும். அதன்படி பாலக்காடு டவுனில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட திட்டமிட்ட பாலக்காடு டவுன்- கோவை ரெயில் (எண்:- 66606) 6, 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பாலக்காடு டவுன்- காஞ்சிக்கோடு இடையே பகுதி அளவு ரத்து செய்யப்படும்
. இந்த ரெயில் பாலக்காடு டவுனில் இருந்து காஞ்சிக்கோடுக்கு இயக்கப்படாது. அந்த நாட்களில் காஞ்சிக்கோடு ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கோவை ரெயில்நிலையம் வரை இயக்கப்படும். சொரனூர் ரெயில்நிலையத்தில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் சொரனூர்-கோவை (எண்:56604) ரெயில் 7-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது