பாரத மாதா ஆலயத்தில் நுழைந்த வழக்கு: கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட பாஜகவினர் 11 பேர் விடுதலை

4 hours ago 1

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பாரத மாதா ஆலயத்தில் அத்துமீறி நுழைந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட 11 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா ஆலய வளாகத்தில் வழிபட, கடந்த 2022-ம் ஆண்டு காவல்துறை தடையை மீறி உள்ளே நுழைந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், தருமபுரி மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் பாஸ்கர், மாவட்ட துணைத் தலைவர் முரளி, பென்னாகரம் வடக்கு ஒன்றிய தலைவர் சிவலிங்கம், ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட 11 பேர் மீது 12 பிரிவுகளில் பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

Read Entire Article