ராமேசுவரம்: ஏப்ரல் 6 அன்று பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவின் போது, ராமேசுவரம் - தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும், இந்த புதிய ரயிலுக்கு பாம்பன் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் வகையில் பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா தொடக்க விழா 2014ம் ஆண்டு நடைபெற்றது.