பாமாயில் விலை உயர்வு

3 months ago 8

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, பாமாயில் கடந்த வாரம் ரூ.2,130க்கு விற்கப்பட்டது.
இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.50 வரை உயர்ந்து ரூ.2,180 என விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பு 100 கிலோ புதுசு நாடு வகை ரூ.10,200க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.300 வரை உயர்த்தப்பட்டு ரூ.10,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ நாடு வகை கடந்த வாரம் ரூ.11,200க்கு விற்பனையானது.

இந்த வாரம் ரூ.300 வரை உயர்த்தப்பட்டு ரூ.11,500க்கு விற்கப்படுகிறது. பாசிப் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.9,850 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது. இந்த வாரம் ரூ.200 வரை குறைந்து ரூ.9,650 முதல் ரூ.9,800 வரை விற்பனையாகிறது. சிகப்பு மசூர் பருப்பு 100 கிலோ ரூ.7,650க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.4,00 வரை குறைந்து ரூ.7,250க்கு விற்கப்படுகிறது.

The post பாமாயில் விலை உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article