பாமக விவகாரம் கஷ்டமாக இருக்கிறது: சீமான் பேட்டி

1 day ago 4

மதுரை: மதுரை கோச்சடையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: ராமதாஸ்-அன்புமணி விவகாரத்தை பார்க்க கஷ்டமாக இருக்கிறது. இதை பிரச்னையாக்கி பேசி இருக்க வேண்டியதில்லை. அவர்களுக்குள் சின்ன, சின்ன பிரச்னைகள் மனம் வருத்தம் தந்திருக்கிறது. இரண்டு பேரும் உட்கார்ந்து பேசும் சூழ்நிலை இல்லாததால் தான் ஐயா பொதுவெளியில் பேச வேண்டியதாகி விட்டது. அக்கட்சியில் இருக்கும் சின்ன முரண், அது சரியாகி விடும்.

தமிழை பெருமையாக பேசும் பிரதமர், நாடாளுமன்றத்தில் சமஸ்கிருதத்தில் ஏன் கல்வெட்டு வைத்தார்? கமல் பேசியதற்கு ஏன் எதிர்க்கிறார்கள்? நீட் குறித்து விஜய் பேசிய கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். மருத்துவம் மட்டுமே கல்வி அல்ல. நீட் பயிற்சி என்னும் பெயரில் முதலாளிகள் பல ஆயிரம் கோடி சம்பாதிப்பதற்கு தான் அது வழியமைத்துள்ளது. விஜயை எதிர்த்து போட்டியிடுவதற்கா..? நான் கட்சி ஆரம்பித்து நடத்துகிறேன்? தமிழ் தோன்றியது குறித்து பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. கன்னடம் எப்போது தோன்றியது என்பது குறித்து பிரச்னை செய்வோர்களுக்கு தெளிவு இல்லை. பிரச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள்.

The post பாமக விவகாரம் கஷ்டமாக இருக்கிறது: சீமான் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article