“பாமக - விசிக இருப்பைத் தக்கவைக்க கொடிமர இடிப்பு பிரச்சினையா?” - வேல்முருகன் சந்தேகம்

4 months ago 13

கடலூர்: “விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டுக்கு கூடிய கூட்டத்தால், அரசியல் கட்சிகள் தங்களது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவே, கட்சிக் கொடிக் கம்பங்களை இடித்து பிரச்சினைகளை கிளப்புவதாக தனக்கு சந்தேகம் எழுகிறது,” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கூறியுள்ளார்.

நெய்வேலி சம்மட்டிக்குப்பம் பகுதி பாமக மாவட்டச் செயலாளராக இருந்த ஆறுமுகம் என்பவர் கடந்த 2016-ல் தனது ஆதரவாளர்களுடன் சென்றபோது அரிவாளால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட 19 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக கடலூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வேல்முருகன் இன்று (நவ.7) ஆஜராகினார்.

Read Entire Article