பாடாலூர் அருகே லாரி மீது வேன் மோதி 15 பேர் காயம்

2 months ago 11

 

பாடாலூர், நவ.17: பண்ருட்டியிலிருந்து திருச்செந்தூருக்கு சென்ற வேன், லாரி மீது மோதியதில் 15 பேர் காயமடைந்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து திருச்செந்தூர் கோயிலுக்கு டிராவல்ஸ் வேன் சென்று கொண்டிருந்தது. இதில், 7 சிறுவர் உள்பட 22 பேர் பயணம் செய்தனர். வேனை பண்ருட்டி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கோவிந்தன் (35) ஓட்டினார்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர்கேட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ராணிபேட்டையிலிருந்து திருச்சிக்கு இரும்பு லோடு ஏற்றி சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது குறுக்கே கார் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த வேன், லாரியின் பின்புறம் மோதியதில் வேனில் இருந்த 15 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாடாலூர் போலீசார் காயமடைந்தவர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாடாலூர் அருகே லாரி மீது வேன் மோதி 15 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article