“பாஜகவுடன் கூட்டு என பொய் பிரச்சாரம் செய்யும் திமுக!” - கொந்தளிக்கும் அதிமுக நிர்வாகிகள்

3 weeks ago 3

இபிஎஸ் - அமித் ஷா சந்திப்பு தமிழக அரசியலை மீண்டும் பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ள நிலையில், “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா சொல்லி இருப்பது அவரது விருப்பம்” என்று நழுவியிருக்கிறார் இபிஎஸ்.

சி.பொன்​னையன்

அப்​படி​யா​னால் பாஜக-வுடன் கூட்​டணி இல்​லையா என்று அதி​முக மூத்த நிர்​வாகி​கள் சிலரிடம் கேட்​டோம். இதற்கு பதில் சொன்ன முன்​னாள் அமைச்​சர் சி.பொன்​னையன், “அமித் ஷாவிடம் பழனி​சாமி கூட்​டணி பேச்​சு​வார்த்தை நடத்​தி​ய​தாக மக்​கள் யாரும் சொல்​ல​வில்​லை. திமுக-​வினரும் பாஜக-​வினரும் அவர்​களின் ஆதரவு சமூக வலை​தளங்​களும் தான் பரப்பி வரு​கி​றார்​கள். மத்​தி​யில் யார் ஆட்​சி​யில் இருந்​தா​லும் தமி​ழ​கத்​துக்கு போதிய நிதி ஒதுக்​கு​வ​தில்​லை. நதிநீர் பங்​கீட்டை தீர்ப்​ப​தில்​லை. ஓரவஞ்​சனை தான் செய்​கின்​ற​னர்.

Read Entire Article