பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்!

7 months ago 23

இஸ்லாமாபாத்: ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வேவில், பாகிஸ்தான் அணிசுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் கேப்டன் பதவியில் பாபர் அசாம் விலகிய நிலையில், தற்போது முகமது ரிஸ்வான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ரிஸ்வான் கூறியுள்ளதாவது; “பாகிஸ்தானின் ஒயிட்-பால் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். உலக அரங்கில் பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்துவது மிகப்பெரிய பாக்கியம், இப்போது இதுபோன்ற திறமையான மற்றும் உற்சாகமான வீரர்களை வழிநடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கேப்டனாக எனது முழுமையானதிறமையை வெளிப்படுத்த நான் உறுதிபூண்டுள்ளேன், மேலும் தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் எனது அபாரமான திறமையான சக வீரர்களுடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒன்றாக, நாங்கள் எங்கள் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

The post பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்! appeared first on Dinakaran.

Read Entire Article