பழைய ஓய்வூதிய திட்ட விவகாரத்தில் உரிய நேரத்தில் அரசு முடிவெடுக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

3 hours ago 1

சென்னை: “அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரத்தில் உரிய நேரத்தில், உரிய முடிவை அரசு எடுக்கும்” என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.22) கேள்வி நேரத்தின்போது மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், “மதுராந்தகம் சார்நிலைக் கருவூலத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “புதிய கட்டிடம் கட்ட வருவாய்த்துறை சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையிடம் விரிவான திட்ட அறிக்கை பெற்றபின் மதுராந்தகம் சார்நிலைக் கருவூலம் அலுவலக கட்டிடம் கட்டப்படும்.” என்றார்.

Read Entire Article