சென்னை :எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது குறித்து ஜெயக்குமார் மழுப்பல் பதில் அளித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்று கோகுல இந்திரா பொது இடத்தில் பேசவில்லை. கோகுல இந்திரா வேறு உள்ளரங்க நிகழ்ச்சியில் பேசியது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தியது விவசாயிகள் கூட்டமைப்புதான், அதிமுக விழாவை நடத்தவில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.
The post பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தியது விவசாயிகள் கூட்டமைப்புதான், அதிமுக விழாவை நடத்தவில்லை :ஜெயக்குமார் appeared first on Dinakaran.