திண்டுக்கல், பிப். 7: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்த தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்ட அளவில் மகளிர் சுயஉதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் விற்பனை கண்காட்சி பழநி பஸ் ஸ்டாண்டில் இன்று முதல் பிப்.13ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்ட மகளிர் சுயஉதவி குழுக்களும் மற்றும் வெளி மாவட்ட மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களின் உற்பத்தி பொருளான பேன்சி, கைவினை பொருட்கள், சின்னாளபட்டி சேலைகள், சணல் பைகள், மூங்கில் கூடைகள், சிறுதானிய உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், மென் பொம்மைகள், சுவரிங் பொருட்கள் ஆகியவற்றை விற்பனைக்கு வைத்திடும் வண்ணம் உரிய அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.இக்கண்காட்சியில் அதிகளவில் இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பழநி பஸ் ஸ்டாண்டில் இன்று முதல் மகளிர் சுயஉதவி குழுக்களின் விற்பனை கண்காட்சி appeared first on Dinakaran.