சென்னை: பழங்குடியின மாணவி ராஜேஸ்வரியின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட். தந்தையை இழந்தாலும் அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கி மாணவி சாதனை படைத்துள்ளார். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் ஐஐடிக்கு உண்மையான பெருமையாக அமையும். ராஜேஷ்வரியை போன்று பலரும் சாதனை படைக்க திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
The post பழங்குடியின மாணவி ராஜேஸ்வரியின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.