திருக்காட்டுப்பள்ளி, பிப் 6: திருக்காட்டுப்பள்ளி அருகே பள்ளி சென்று வருவதாக கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை என்று அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். திருக்காட்டுப்பள்ளி அருகே பழைய ஆற்காடு கீழத் தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் மகள் அஜிஷ் (14). இவர், திருக்காட்டுப்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகிறார்.
கடந்த 4 ம் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடுதிரும்பவில்லையாம். பள்ளி, தோழிகள் வீடு, உறவினர்கள் வீடு உள்ளிட்ட அனைத்து இடத்திலும் தேடி பார்த்தும் கிடைக்காததால், இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசில், மாணவியின் தந்தை பாக்கியராஜ் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
The post பள்ளிக்கு சென்ற மாணவி மாயம் appeared first on Dinakaran.