பள்ளி மாணவியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்: உரிமையாளரிடம் போலீசார் விசாரணை

5 hours ago 3

சென்னை, ஜூன் 20: திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலை குதிரத்தலி மக்கான் தெருவை சேர்ந்தவர் தர்மன். இவர் சென்னை மாநகராட்சியின் 129வது வார்டு சுகாதார பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி திருவல்லிக்கேணி வெங்கடசாமி தெருவை சேர்ந்த லட்சுமி (42) என்பவர் தனது வளர்ப்பு நாய் கடைக்கு சென்ற சிறுமியை கடித்து குதறியது. இதனைக் கண்ட பொதுமக்கள் நாயை விரட்டி சிறுமியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக சிறுமியின் தந்தை தர்மன், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், வளர்ப்பு நாயின் உரிமையாளர் லட்சுமியிடம் விசாரித்து வருகின்றனர்.

The post பள்ளி மாணவியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்: உரிமையாளரிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article