
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகா கொக்கனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேய உற்சவம் என்ற பெயரில் திருவிழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டிக்கான ஆஞ்சநேய உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஆஞ்சநேயர், பீரதேவரு, துர்காம்பா, மாதங்கியம்மா தேவி ஆகிய சாமிகள் பல்லக்குகளில் கோவிலில் இருந்து வீடு, வீடாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. அப்போது ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட சாமிகளுக்கு பக்தர்கள் ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவித்தனர்.
அதாவது 10 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவித்தனர். ெமாத்தம் 4 சாமிகளுக்கும் சேர்த்து ரூபாய் நோட்டு மாலைகள் மூலம் ரூ.15 லட்சத்து 69 ஆயிரத்தை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தினர். இதில் ஆஞ்சநேய சாமிக்கு மட்டும் ரூ.14 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.