சென்னை: தென்மேற்கு பருவமழை தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பருவமழையால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து களப்பணியாற்ற அறிவுறுத்தினார்.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.