பரமத்திவேலூர் அருகே 14 வயது சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த டிரைவர்

1 day ago 2

*போக்சோவில் கைது

பரமத்திவேலூர் : பரமத்திவேலூர் அருகே, 14 வயது சிறுமி வீட்டில் குளித்துக் கொண்டு இருந்ததை செல்போனில் வீடியோ எடுத்த லாரி டிரைவரை, போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள மண்டபத்துபாறை கிராமத்தை சேர்ந்தவர் பூவலிங்கம் மகன் பிரபு (எ) பிரசாந்த்குமார் (27).

லாரி டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டில் குளித்துக்கொண்டு இருப்பதை, மறைந்திருந்து பார்த்ததுடன், தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை பார்த்த சிறுமி அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்து, அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து பரமத்திவேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் எஸ்ஐ சுமதி விசாரணை நடத்தினார். இதில் சிறுமி குளித்ததை லாரி டிரைவர் பிரபு செல்போனில் ஆபாச வீடியோ எடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பிரபுவின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து, நேற்று பிரபுவை கைது செய்து, பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பரமத்திவேலூர் அருகே 14 வயது சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த டிரைவர் appeared first on Dinakaran.

Read Entire Article