பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடங்களில் கட்டிட சீரமைப்பு பணிகள் நிறுத்தம்: நியாய விலை கடையை தாங்களே சரி செய்த பொதுமக்கள்

1 day ago 5

பரந்​தூர் விமான நிலை​யம் அமைய​வுள்ள ஏகனாபுரம் கிராமத்​தில் கட்​டிட சீரமைப்​பு பணி​கள் உள்பட பல்​வேறு பணி​கள் நிறுத்​தப்​பட்​டுள்​ள​தாக அப்பகுதி மக்​கள் குற்​றம் சாட்​டி​யுள்​ளனர். இதனைத் தொடர்ந்து தங்​கள் கிராமத்​தில் உள்ள பழுதடைந்த நியாய விலைக் கடையை அவர்​களே சரி செய்​துள்​ளனர். காஞ்​சிபுரம் அருகே உள்ள பரந்​தூரில் 5476 ஏக்​கர் பரப்​பள​வில் பசுமை வழி விமான நிலை​யம்​ அமைய உள்​ளது.

மொத்​தம் 13 கிராமங்​களில் இருந்து இந்த விமான நிலை​யத்​துக்​காக நிலங்​கள் கையகப்​படுத்​தப்பட உள்​ளன. இந்த நிலங்​களில் நீர்​நிலைகள், ஏரி, குளங்​கள், விவ​சாய நிலங்​கள், வீடு​கள், அரசு புறம்​போக்கு நிலங்​கள் உள்​ளிட்​டவை அடக்​கம். இந்த விமான நிலை​யத்​துக்​காக நிலம் எடுக்​கப்​படும் கிராமங்​களில் ஏகனாபுரம் உள்​ளிட்ட கிராமங்​கள் முழு​வது​மாக கையகப்​படுத்​தப்பட உள்​ளன. இதனால் இந்த கிராமத்தை மையமாக வைத்து ஆயிரம் நாளை கடந்து மக்​கள் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

Read Entire Article