சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் நிலையை அடையும் முன்பே பரந்தூர் விமான நிலையத்தை திறந்தால் அதற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் இந்தத் திட்டத்தையே கைவிட வேண்டும் என்றும் போராட்டக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்கு முறை ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளன.