சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடாவிட்டால் நாம் தமிழர் கட்சி விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். பரந்தூரில் 2-வது பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான திட்டத்தை 1000 நாட்களுக்கு மேலாக ஏகனாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்த்து வருகின்றனர்.
அதை துளியும் மதிக்காமல் தமிழக அரசு இத்திட்டத்தை நிறை வேற்றியே தீருவேன் என்னும் முனைப்பில் பொதுமக்களின் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை விரைவுபடுத்தி வருகிறது. அதன்படி கடந்த மாதம் வரையறுக்கப்பட்ட நிலங்களுக்கான மதிப்பீட்டுத் தொகைகள் வெளியிடப்பட்டன.